யாருமற்ற இரவுகளில்
எனையள்ளி திண்ணும்
உன் நினைவுகளுக்கு
இரையாகும் என்னை
நிமிடங்களில் உயிர்பிக்க
நொடிகள் போதவில்லையோ...
உன்னால் சிதிலமடையும்
என் கனவுகளை நனவாக்க
உன் இதயத்தில் நானில்லையோ....
நிமிடங்களில் கரைகின்றேன்
உன்னால் நிம்மதியை இழக்கின்றேன்...
அடர்கானகத்தில்
வெறுமைத்தீயினில் வெந்து தணிகின்றேன்
வெம்மை தாக்கிய-என்
வெற்றுடலை பெற்று-நீ
குளிர்காய்வாயோ...
உயிரில் கலந்தவளே என்னை
உயிர்பிக்க மாட்டாயோ...
உனக்கு கனவுகளற்று போகலாம்
என்மீது காதலுமற்று போகுமோ....
உன் நினைவுகள்
பற்றவைத்த நெருப்பை
அணைத்துவிட என்னை
ஒருமுறையேனும் அணைத்துவிடு...
அணைத்துவிட என்னை
ஒருமுறையேனும் அணைத்துவிடு...
முள்ளை முள்ளால்தானே எடுக்கவேண்டும்
முயன்று பார்
கவிதைகளோடு
காதலையும் ஈன்றெடுப்போம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக